"உதவுங்கள், இல்லை என்னை கருணை கொலை செய்யுங்கள்"

கோவை, நவம்பர் 13

விபத்தில் பாதிக்கபட்டு வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளதால் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய கோரி சோமனூரை சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.



கோவையை அடுத்து சோமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(51). தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு விபத்து ஏற்பட்டதில் முதுகுதண்டு பாதிக்கபட்டு இடுப்பிற்கு கீழ் செயல்படாமல் அவதிபட்டு வந்துள்ளார். இவருக்கு குழந்தை தெரேசா என்ற மனைவியும் ஆணிஸ் வெனிட்டா(18) கல்லூரியில் பயிலும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி குழந்தை தெரேசாவிற்கும் ஒரு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இவர்கள் இருவரையும் கவனிக்க வேண்டிய நிலையில் ஆணிஸ் வெனிட்டா கல்லூரி படிப்பை தொடர முடியாமலும் தங்களை கவனித்து கொள்ள வேண்டி இருப்பதால் வேலைக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளதாக கூறினார்.

மேலும், வருமானமின்றி சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒரு வேளை உணவளித்து வருகின்றனர் எனவும் மாதம் 2000 மருத்துவ செலவு ஆவதால் தங்களால் அதை கூட செலவு செய்ய முடியாத நிலை உள்ளதாக வர்கீஸ் தெரிவித்தார். இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கபட்டு உள்ளதாக கூறியவர் மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் உதவி கோரி மனு அளித்து 3 வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியவர் தனக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிடகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...